உலகம்செய்திகள்

ட்ரம்பின் அதிரடி! USAID- இன் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம்

Share
5 47
Share

ட்ரம்பின் அதிரடி! USAID- இன் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவை சேர்ந்த USAID நிறுவனத்தின் 2,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தில்(USAID )சுமார் 2,000 ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், மீதமுள்ள முழுநேர ஊழியர்களில் பெரும்பாலோர் இரவு முழுவதும் நிர்வாக விடுப்பில் அனுப்பப்படுவார்கள் எனவும், அனுப்பட்ட தொழிலாளர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது.

இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதன்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தது.

பின்னர் இந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் நீக்கியிருந்தது.

இந்த நிலையில் உலகளவில் USAID அமைப்பை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும்(400 பேர்) விடுப்பில் அனுப்புவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...