15 13
உலகம்செய்திகள்

காசாவில் போரை நிறுத்தக்கோரி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்து

Share

காசாவில் போரை நிறுத்தக்கோரி துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வலியுறுத்துv

ஹமாஸ் உடன் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் 2024 அக்டோபர் 7 முதல் காசாவில் (Gaza) தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பலர் நாடு திரும்ப முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம், நெதன்யாகுவுடன் ஒரு “வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான” உரையாடலைக் மேற்கொண்டதாக ஹாரிஸ் கூறியுள்ளார்.

இதன்போது, இஸ்ரேலின் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஹாரிஸ் உறுதிப்படுத்தினார்.

அத்துடன் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை அமெரிக்க துணை ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

39,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மரணித்துள்ள காசாவின் கொடூரமான போருக்கு இறுதி முடிவை கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது என்ற ஜனாதிபதி ஜோ பைனின் நீண்டகால செய்தியை ஹாரிஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

இதேவேளை ஹாரிஸ், ஹமாஸின் செயற்பாடுகளையும் கண்டித்துள்ளார்.

2024 ஒக்;டோபர் 7 அன்று சுமார் 1,200 பேரைக் கொன்று இஸ்ரேலில் இருந்து 250 பேரைக் கடத்திச் சென்ற ஹமாஸ் அமைப்பு, இறுதியில் காசாவில் ஏற்பட்ட துன்பங்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கமலா ஹாரிஸ் வலியுறுத்தினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...