16 2
உலகம்செய்திகள்

லெபனானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா

Share

லெபனானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், அதன் குடிமக்களை லெபனானை (Lebanon) விட்டு உடனடியாக வெளியேறுமாறு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க (US) தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியும் லெபனானின் நிலைமை விரைவாக மோசமடையக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு (Israel) எதிராக கடுமையான பதிலடி கொடுப்பதாக ஈரான் சபதம் செய்துள்ளது.

மேலும், பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் கொன்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது படுகொலை நடந்தது.

லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொல்லா, ஈரான் ஆதரவுக் குழு, அத்தகைய பதிலடியில் பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்பதுடன் இது ஒரு தீவிரமான இஸ்ரேலிய பதிலைத் தூண்டும்.

இந்நிலையிலேயே, லெபனான் குடியேற்றவாசிகளை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறு வெளியேற விரும்பாதவர்களை ஒரு நிரந்தர, பாதுகாப்பான இடத்தை அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...