16 2
உலகம்செய்திகள்

லெபனானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா

Share

லெபனானை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மக்களை வலியுறுத்தும் அமெரிக்கா

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், அதன் குடிமக்களை லெபனானை (Lebanon) விட்டு உடனடியாக வெளியேறுமாறு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க (US) தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் லாம்மியும் லெபனானின் நிலைமை விரைவாக மோசமடையக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு (Israel) எதிராக கடுமையான பதிலடி கொடுப்பதாக ஈரான் சபதம் செய்துள்ளது.

மேலும், பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் கொன்ற சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது படுகொலை நடந்தது.

லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்பொல்லா, ஈரான் ஆதரவுக் குழு, அத்தகைய பதிலடியில் பெரும் பங்கு வகிக்கக்கூடும் என்பதுடன் இது ஒரு தீவிரமான இஸ்ரேலிய பதிலைத் தூண்டும்.

இந்நிலையிலேயே, லெபனான் குடியேற்றவாசிகளை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வாறு வெளியேற விரும்பாதவர்களை ஒரு நிரந்தர, பாதுகாப்பான இடத்தை அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...