tamilni 547 scaled
உலகம்செய்திகள்

ஹவுதிகளை அலறவிட்ட அமெரிக்கா, பிரித்தானியா

Share

ஹவுதிகளை அலறவிட்ட அமெரிக்கா, பிரித்தானியா

செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் முன்னெடுத்துவரும் நிலையில், ஏமனில் ஹவுதிகளின் 18 இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல் தொடுத்துள்ளன.

ஏமனில் உள்ள ஹவுதிகளின் 18 இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் சனிக்கிழமை புதிய தாக்குதலை நடத்தியதாக அவர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக ஹவுதிகள் முன்னெடுத்து வந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக இது அமைந்துள்ளது. ஏமனில் 8 இடங்களில் 18 இலக்குகளை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல்களுக்கு அவுஸ்திரேலியா, பஹ்ரைன், டென்மார்க், கனடா, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் இது இரண்டாவது என்றும், செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல் தொடங்கிய பின்னர் இது நான்காவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து வணிக மற்றும் கடற்படை கப்பல்கள் மீதான 45 தாக்குதல்களை ஹவுதிகள் முன்னெடுத்துள்ளனர்.

இது உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...