உலகம்செய்திகள்

ஹவுதிகளை அலறவிட்ட அமெரிக்கா, பிரித்தானியா

Share
tamilni 547 scaled
Share

ஹவுதிகளை அலறவிட்ட அமெரிக்கா, பிரித்தானியா

செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் முன்னெடுத்துவரும் நிலையில், ஏமனில் ஹவுதிகளின் 18 இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் தாக்குதல் தொடுத்துள்ளன.

ஏமனில் உள்ள ஹவுதிகளின் 18 இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் சனிக்கிழமை புதிய தாக்குதலை நடத்தியதாக அவர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவார காலமாக ஹவுதிகள் முன்னெடுத்து வந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக இது அமைந்துள்ளது. ஏமனில் 8 இடங்களில் 18 இலக்குகளை தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல்களுக்கு அவுஸ்திரேலியா, பஹ்ரைன், டென்மார்க், கனடா, நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் இது இரண்டாவது என்றும், செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல் தொடங்கிய பின்னர் இது நான்காவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து வணிக மற்றும் கடற்படை கப்பல்கள் மீதான 45 தாக்குதல்களை ஹவுதிகள் முன்னெடுத்துள்ளனர்.

இது உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...