6 36
உலகம்செய்திகள்

போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா – அமெரிக்கா

Share

போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா – அமெரிக்கா

சவூதி அரேபியாவில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உக்ரைனுடனான போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் நான்கு கொள்கைகளுக்கு உடன்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கொள்கைகளை ரூபியோ பின்வருமாறு விளக்கியிருந்தார்.

1. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ள எங்கள் தூதரகங்களின் செயல்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, தற்போதைய பாதையில் நாம் தொடர்ந்து செல்ல இராஜதந்திர வசதிகள் காணப்பட வேண்டும்.

2. உக்ரைனுடனான மோதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும், பணியாற்றவும் எங்கள் தரப்பில் இருந்து ஒரு உயர்மட்டக் குழுவை நியமிக்கப் போகிறோம்.

3. உக்ரைனில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் விளைவாக ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு இரண்டையும் பற்றி விவாதிக்கவும் சிந்திக்கவும் தொடங்குவோம்.

4. உற்பத்தித் திறன் மிக்கதாக முன்னேற்றத்தை உறுதிசெய்ய தொடர்ந்து ஈடுபடுவோம்.” என மார்கோ சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையில் மார்கோ ரூபியோ , அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி உதவியாளர் யூரி உஷாகோவ் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

உக்ரைனில் போர் முடிவுக்கு வந்தால் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

பொது நலன் சார்ந்த பிரச்சினைகளில் புவிசார் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யர்களுடன் பங்காளியாக அமெரிக்காவிற்கு நம்பகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ரூபியோ கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பல வருட பகைமைக்குப் பிறகு ஒரு “மிகப்பெரிய சாதனை” என்று ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவரும், சவுதி அரேபியாவின் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவின் ஒரு அங்கத்தவரான கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.

அத்தோடு, அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் முன்னேற்றம் சிறந்த அடித்தளத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...