24 662216bdf1336
உலகம்செய்திகள்

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை

Share

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை

ஈரான்(iran) மீதான இஸ்ரேலின்(israel) பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது.

அதன்படி டெல் அவிவ் (Tel Aviv) பிராந்தியத்தின் ஹெர்ஸ்லியா (Herzliya), நெதன்யா (Netanya), எவன் யெஹுதா (Even Yehuda) ஜெருசலேம் (Jerusalem) மற்றும் பீர் ஷெவா (Be’er Sheva) பகுதிகளுக்கு வெளியே அடுத்த அறிவிப்பு வரும் வரை பயணிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்குக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது இஸ்ரேல் ஈரான் மோதலினால் இஸ்ரேலில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலியா தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் அதிக அச்சுறுத்தல் பிராந்தியம் முழுவதும் உள்ளது எனவும் பாதுகாப்பு நிலைமை விரைவாக மோசமடையக்கூடும், ”என்று அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

இதேவேளை விமான சேவைகள் ரத்து செய்தல் மற்றும் பிற பயண இடையூறுகள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேலிலிருக்கும் அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....