24 662216bdf1336
உலகம்செய்திகள்

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை

Share

இஸ்ரேலிலுள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு தடை

ஈரான்(iran) மீதான இஸ்ரேலின்(israel) பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தனது தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது.

அதன்படி டெல் அவிவ் (Tel Aviv) பிராந்தியத்தின் ஹெர்ஸ்லியா (Herzliya), நெதன்யா (Netanya), எவன் யெஹுதா (Even Yehuda) ஜெருசலேம் (Jerusalem) மற்றும் பீர் ஷெவா (Be’er Sheva) பகுதிகளுக்கு வெளியே அடுத்த அறிவிப்பு வரும் வரை பயணிக்க வேண்டாம் என்று ஊழியர்களுக்குக் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போது இஸ்ரேல் ஈரான் மோதலினால் இஸ்ரேலில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அவுஸ்திரேலியா தனது குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் அதிக அச்சுறுத்தல் பிராந்தியம் முழுவதும் உள்ளது எனவும் பாதுகாப்பு நிலைமை விரைவாக மோசமடையக்கூடும், ”என்று அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.

இதேவேளை விமான சேவைகள் ரத்து செய்தல் மற்றும் பிற பயண இடையூறுகள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேலிலிருக்கும் அவுஸ்திரேலியர்களுக்கு அந்நாட்டு எச்சரித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...

Election Commission 1
இலங்கைஅரசியல்செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025: தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஆரம்பம் – பெயர் சேர்க்க ஊடகங்களுக்கு நேரடிப் பொறுப்பு!

2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளைத் (Voter Register Revision) தேர்தல்கள் ஆணைக்குழு...