tamilni 200 scaled
உலகம்செய்திகள்

இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை மிரட்டல்: பரப்புரை கூட்டத்தில் பரபரப்பு

Share

இந்திய வம்சாவளி ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை மிரட்டல்: பரப்புரை கூட்டத்தில் பரபரப்பு

இந்திய வம்சாவளி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக களத்தில் இருப்பவர் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி. இவரையும், இவருக்கு ஆதரவாக பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களையும் கொலை செய்ய இருப்பதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

நியூ ஹாம்ப்ஷயர், டோவர் பகுதியை சேர்ந்த 30 வயது Tyler Anderson என்பவர் இந்த வழக்கில் உள்ளூர் நேரப்படி திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பதிவு செய்ததாக உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு குறுந்தகவல்களில், அவர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அமெரிக்க நீதித்துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவேக் ராமசாமியின் பரப்புரை நிர்வாகிகள் விரைவாகச் செயல்பட்டதாக FBI தாக்கல் செய்துள்ள வாக்குமூலம் வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் அந்த குறுந்தகவல் குறித்து பொலிசாருக்கு உடனடியாக புகார் அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண் ஆண்டர்சனுக்கு தொடர்புடையது என்ற முக்கிய தகவல்களையும் பரப்புரை நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். இதுவே ஆண்டர்சனை கைது செய்ய உதவியதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல் விடுத்த ஆண்டர்சனை கைது செய்வதில் விரைந்து நடவடிக்கை எடுத்த சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆண்டர்சன் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $250,000 வரை அபராதம் ஆகியவற்றை எதிர்கொள்கிறார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...