tamilni 132 scaled
உலகம்செய்திகள்

சிரியா மீது அமெரிக்கா கடும் விமானத் தாக்குதல்

Share

சிரியா மீது அமெரிக்கா கடும் விமானத் தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் அமைப்புக்களின் ஆயுதக் கிடங்கு மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

இரண்டு அமெரிக்க எஃப் -15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாகவும், தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தாக்குதலுக்கு அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதல் 9 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...