2 18
உலகம்செய்திகள்

அணுதளங்களில் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்த ஈரான்!

Share

அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஃபோர்டோ அணுசக்தி மையத்தில் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்மதி படங்களில் மண்ணை அகற்றும் இயந்திரங்கள், சுரங்கப்பாதைகள் அருகே நடவடிக்கைகள், மற்றும் பணிகளுக்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் ஆகியவை காணப்பட்டுள்ள நிலையில் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானின் ஃபோர்டோ (Fordow) அணுசக்தி மையம், தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில், மலைப்பகுதியில் நிலத்தடியில் அமைந்துள்ள முக்கியமான யுரேனியம் செறிவூட்டல் தளமாகும்.

2025 ஜூன் 22 அன்று, அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் விமானங்கள் மற்றும் GBU-57 பங்கர் பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தி ஃபோர்டோ உள்ளிட்ட மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து நடத்தப்பட்டவையாகும், ஆனால் சேதத்தின் அளவு குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு ஈரான் தனது அணுசக்தி தளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்மதி படங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த மீள் கட்டுமான முயற்சிகள், ஈரானின் அணுசக்தி திட்டங்களை மீண்டும் தொடர விரும்புவதாகவும், தாக்குதல்களால் தடைபடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தெஹ்ரான் செயல்படுவதாகவும் கருதப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 67874f1d5d009
செய்திகள்இலங்கை

தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் ஆபத்து: வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் – மருத்துவர்களுக்கு இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை!

மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி...

images 7 3
செய்திகள்இலங்கை

பேருந்து கட்டணம் செலுத்த புதிய வசதி: வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் – அமைச்சர் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி முதல் வங்கி அட்டைகள் (Bank Cards) மூலம் பேருந்து கட்டணங்களைச்...

images 6 3
உலகம்செய்திகள்

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட காஸா சிறுமி: சவக்கிடங்கில் 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச்...