6 4
உலகம்செய்திகள்

உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா

Share

உக்ரைனுக்கான(Ukraine) அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அத்துடன், அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump) , துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையேயான சர்ச்சைக்குரிய சந்திப்பை அடுத்தே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்(Viladimir Putin) படையெடுப்பை அடுத்து, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

ஆனால் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தமை, மோதலை நோக்கிய அமெரிக்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது, அத்துடன், ரஷ்யா(Russia) தொடங்கிய போருக்கு உக்ரைனை ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவுடன் போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட வேண்டும் அல்லது “நாங்கள் வெளியேறிவிட்டோம்” என்று செலென்ஸ்கியிடம், ட்ரம்ப் கூறினார், மேலும் உக்ரைன் மற்றும் பைடன் நிர்வாகத்தின் ராஜதந்திரம் இல்லாததால் போர் நீடித்தது என்ற கூற்றை எதிர்த்ததன் மூலம், உக்ரைன் ஜனாதிபதி, அவமரியாதை செய்ததாக வான்ஸ் குற்றம் சாட்டினார்.

Share
தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...