உலகம்செய்திகள்

உக்ரைனுக்கான இராணுவ உதவியை நிறுத்திய அமெரிக்கா

Share
6 4
Share

உக்ரைனுக்கான(Ukraine) அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அத்துடன், அமைதியில் கவனம் செலுத்துவதில் ஜனாதிபதி தெளிவாக உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump) , துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி ஆகியோருக்கு இடையேயான சர்ச்சைக்குரிய சந்திப்பை அடுத்தே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின்(Viladimir Putin) படையெடுப்பை அடுத்து, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.

ஆனால் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தமை, மோதலை நோக்கிய அமெரிக்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது, அத்துடன், ரஷ்யா(Russia) தொடங்கிய போருக்கு உக்ரைனை ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஷ்யாவுடன் போர் நிறுத்த உடன்பாட்டை எட்ட வேண்டும் அல்லது “நாங்கள் வெளியேறிவிட்டோம்” என்று செலென்ஸ்கியிடம், ட்ரம்ப் கூறினார், மேலும் உக்ரைன் மற்றும் பைடன் நிர்வாகத்தின் ராஜதந்திரம் இல்லாததால் போர் நீடித்தது என்ற கூற்றை எதிர்த்ததன் மூலம், உக்ரைன் ஜனாதிபதி, அவமரியாதை செய்ததாக வான்ஸ் குற்றம் சாட்டினார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...