8 7
உலகம்செய்திகள்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பின் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு

Share

இலங்கை உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்காக செயல்படும் சுமார் 24 திட்டங்களுக்கான நிதி பங்களிப்பை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது.

இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்த பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் OMB அலுவலகம் வெளியிட்ட இந்தப் பரிந்துரை இறுதியானது அல்ல. .

வெளியுறவுத்துறை பணியகங்களுக்கு ஜுலை மாதம் 11ஆம் திகதி வரை மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது.

ஆபத்தில் உள்ள திட்டங்களில், உலகளாவிய உரிமைகள் இணக்கம் மற்றும் உக்ரைனில் உள்ள சட்ட நடவடிக்கை வலையமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது ஆதாரங்களை சேகரிக்கவும், ரஷ்ய போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை ஆதரிக்கவும் உதவுகிறது. மியன்மார் இராணுவத்தின் அட்டூழியங்கள் மற்றும் சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் கீழ் நடந்த துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தும் முயற்சிகள் ஆகியவைகளும் இதில் அடங்கும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்தத் திட்டங்களைப் பாதுகாக்க மட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளை மேற்கொள்வார் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

எனினும் அவர் உக்ரைனுடன் தொடர்புடையவற்றை ஆதரிக்கலாம். இந்த முடிவு டிரம்ப் நிர்வாகத்தின் அமெரிக்கா முதலில் கொள்கையை பிரதிபலிக்கிறது.

இது உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஆதரிப்பதை விட உள்நாட்டு மறுசீரமைப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது.

முந்தைய வெளிநாட்டு உதவி குறைப்புகள் ஏற்கனவே மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் போர்க்குற்ற ஆவணப்படுத்தல் முயற்சிகளை பலவீனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....