29 scaled
உலகம்செய்திகள்

ஹவுதி தளபதி மீது அமெரிக்கா பொருளாதார தடை

Share

ஹவுதி தளபதி மீது அமெரிக்கா பொருளாதார தடை

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் யேமனின் ஹவுதி கிளா்ச்சிப் படையின் முக்கிய தளபதி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் புதன்கிழமை பொருளாதாரத் தடை அறிவித்தன.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலக செய்தித் தொடா்பாளா் மத்யூ மில்லா் கூறியதாவது:

செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி படையின் முக்கிய தளபதி இப்ராஹிம் அல்-நஷீரி மீது அமெரிக்காவும், பிரிட்டனும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இது மட்டுமன்றி, இந்த விவகாரத்தில் ஈரானின் துணை இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிப் படையின் துணை தளபதி முகமது ரெஸா ஃபலாஸ்தே மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஈரான் மற்றும் ஹத்தி அதிகாரிகளுக்கு வா்த்தகப் பொருள்களைக் கொண்டு சென்ற ஹொங்கொங்கைச் சோ்ந்த கேப் டீஸ், கொஹானா ஆகிய நிறுவனங்களும் தடைப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

சா்வதேச வா்த்தக வழித்தடத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் உறுதியாக உள்ளதை இந்தப் பொருளாதாரத் தடைகள் உணா்த்துகின்றன என்றாா் மத்யூ மில்லா்.

இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதாக ஹவுதி கிளா்ச்சியாளா்கள் கூறினாலும், பிற கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...