24 12
உலகம்செய்திகள்

தமிழின படுகொலைக்கு சர்வதேசம் அங்கீகாரம் கோரும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

Share

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், இலங்கையில் தமிழினப் படுகொலை நினைவு தினத்தை தமது சமூக ஊடகங்களில் நினைவுச்கூர்ந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அழைப்புக்களை விடுத்துள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு மற்றும் தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அமெரிக்காவும் உலக சமூகமும் இந்தக் கொடுமையை அங்கீகரிக்க வேண்டும், தமிழர் சுயநிர்ணயத்தை ஆதரிக்க வேண்டும் என்று, பென்சில்வேனியாவின் 12ஆவது காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதியான சம்மர் லீ வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கரோலினாவின் 2ஆவது காங்கிரஸ் மாவட்டத்திற்கான பிரதிநிதியாகப் பணியாற்றும் காங்கிரஸ் பெண்மணி டெபோரா ரோஸும் தமது பதிவை இடுகை செய்துள்ளார்.

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து தேடும் தமிழ் சமூகங்களுடன் தாம் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூ ஜெர்சியின் 3ஆவது காங்கிரஸ் மாவட்டத்திற்கான பிரதிநிதியான காங்கிரஸ் உறுப்பினர் ஹெர்ப் கொனவே, தமிழ் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நியாயமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வை வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் காங்கிரஸில் உரையாற்றும்போது, இனப்படுகொலையை அங்கீகரிப்பதற்காக வாதிடும் அதேவேளையில், ஈழத் தமிழர்களுடன் இணைந்து நிற்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...