tamilni 95 scaled
உலகம்செய்திகள்

இராணுவ முகாமை தாக்கியமைக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

Share

இராணுவ முகாமை தாக்கியமைக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

சமீபத்தில் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக் மற்றும் சிரியா மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீதான தாக்குதல் ஈரானின் ஆதரவுடன் ஆயுதமேந்திய குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சந்தேகத்திற்கிடமான 85 இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

30 நிமிடங்களில் அமெரிக்க போர் விமானங்கள் அந்த இடங்களில் 125 குண்டுகளை வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்கு பின்னர் ஈராக், சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதுடன், மத்திய கிழக்கில் போரை தீவிரப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளன.

இதனிடையே, அமெரிக்காவின் பதில் நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும், தேவையான நேரத்தில் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...