24 65fe2759be383
உலகம்செய்திகள்

கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: அதிகரிக்கும் பனிப்புயல்

Share

கனேடிய மக்களுக்கு வெளியான எச்சரிக்கை: அதிகரிக்கும் பனிப்புயல்

கனடாவில் தற்போது நிலவிவரும் பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவானது மேலும் வலுவடையும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டின் டொராண்டோ பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், 50 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு காணப்படும் எனவும், பெப்ரவரி மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட 6.4 சென்டிமீட்டர் என்ற அளவிலும் காட்டிலும் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் “இன்று மதியம் அல்லது மாலையில் பனி பொலிவானது தீவிரமடையும்” என்று கனடாவின் சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறும் கூறப்பட்டுள்ளது . கனடாவின் பிரதான நகரங்கள் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள நகராட்சி பகுதிகளில் 10 சென்டிமீட்டர் வரை பனி பொழியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தற்போது டொராண்டோவில் உள்ள பெரிய ஏரிகள் மற்றும் பிற இடங்களில் 50 சென்டிமீட்டர்வரை பனிப்பொழிவு காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

எனினும் டொராண்டோ மற்றும் ஒட்டாவா போன்ற நகரங்களில் அடுத்த வாரமளவில் மிதமான வெப்பநிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...