tamilnaadi 18 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்

Share

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கனடாவின் பிராந்திய பொலிஸாரிடம் வலியுறுத்தல்

கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிக சிற்சபேசன் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கை பொலிஸாருக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தார்.

எனினும், இலங்கை பொலிஸாரும், படையினரும் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை இழைத்துள்ளதாக ராதிகா குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், பீல் பிராந்தியத்தில் 22,780 தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் 32,960 பேர் தமிழ் அல்லது இலங்கை பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கம் இன அழிப்பில் ஈடுபட்டதாக உலக நாடுகளும் பொலிஸ் பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் பீல் பிராந்திய பொலிஸார் இலங்கை பொலிஸாருடன் இணைந்து செயற்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழர்களது காணிகள் இலங்கையில் அபகரிக்கப்படுவதாகவும் உள்ளக இடம்பெயர்விற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளோ அல்லது வேறும் உதவிகளோ வழங்கப்படக் கூடாது என தெரிவித்துள்ளதோடு தமிழ் மக்களிடம் பீல் பிராந்திய பொலிஸார் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் ராதிகா வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
5 19
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதிக்காக கொழும்பில் தேடப்படும் வீடு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தங்குவதற்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

4 18
இலங்கைசெய்திகள்

உப்பு தட்டுப்பாட்டுக்கு அமைச்சரவையை குற்றம் சுமத்தும் உற்பத்தியாளர்கள்

உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள...

3 19
இலங்கைசெய்திகள்

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. குறித்த...

2 27
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் – கழன்றோடிய சக்கரம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த...