24 6657fab543f43
உலகம்செய்திகள்

காசா தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

Share

காசா தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

காசாவில் பஞ்சம் ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க யுஎஸ்எய்ட் (USAID) அமைப்பின் தலைவர் சமந்தா பவர் (Samantha Power) எச்சரித்துள்ளார்.

தெற்கு காசா நகரமான ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதால், அமெரிக்கா எச்சரித்துள்ள “பேரழிவு விளைவுகள்” நிஜமாகி வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

பல மாதங்களாக, ஜனாதிபதி பைடன் மற்றும் அவரின் நிர்வாகமும், ரஃபாவில் (Rafah) ஒரு பெரிய தரை இராணுவ நடவடிக்கை பொதுமக்களை பெரும் ஆபத்தில் ஆழ்த்தும் என்று இஸ்ரேலுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

தற்போது ரஃபா மற்றும் எகிப்து- காசா எல்லையைச் சுற்றி மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறுகின்றபோதும் அமெரிக்கா நீண்டகாலமாக எச்சரித்து வரும் பேரழிவு விளைவுகள் யதார்த்தமாகி வருகின்றன.

இந்நிலையில், காசாவின் நிலைமைகள் முன்னர் எந்தக் காலகட்டத்தையும் விட இப்போது மோசமாக உள்ளன.

95 சதவீத மக்கள் பல மாதங்களாக சுத்தமான தண்ணீரைப் பெறவில்லை என்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசியின் பேரழிவு நிலைகளை எதிர்கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 36,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போரிலிருந்து தஞ்சமடைந்துள்ள தெற்கு காசா நகரமான ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை அடுத்தே சமந்தா பவரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...