உலகம்செய்திகள்

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

Share

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் உலக வெப்பமயமாதல் 3.1°C என்ற உயர்வுக்கு நெருங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

குறித்த விடயமானது ஐக்கிய நாடுகள் சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பல தசாப்தங்களாக நடைபெற்ற காலநிலை பேச்சுவார்த்தைகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முன்னேற்றமும் இருந்த போதிலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் 3.1°C என்ற பேரழிவுகரமான வெப்பநிலை உயர்வுக்கு நாம் நெருங்கி வருவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

2023 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு இடைவெளி அறிக்கையில், பசுமை வாயு வெளியீடுகள் 2023 ஆம் ஆண்டில் சாதனை அளவை எட்டியதையும் மற்றும் வளர்ச்சியின் விகிதம் பெருந்தொற்றுக்கு முந்திய காலத்தை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

 

இதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து புதைபடிவ எரிபொருட்களை நம்பியிருப்பதும் மற்றும் நாடுகள் தீவிரமான காலநிலை நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்தாததுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அத்தோடு, தற்போதைய போக்கு பாரிஸ் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட 1.5°C இலக்கை நிறைவேற்றுவதற்கு உலகை மிகுந்த போராட்டத்திற்கு இட்டுச் செல்வதாக சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...