9 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Share

பிரித்தானியா இலத்திரனியல் கடவுச்சீட்டு தாமதம் : அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவில் காலாவதியான பயண ஆவணங்களை சர்வதேச பயணங்களுக்கு ஏற்றுக்கொள்ளும் கால அவகாசத்தை மார்ச் 2025 வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரசு இலத்திரனியல் கடவுசீட்டு முறைக்கு மாறிவரும் நிலையில் இதில் ஏற்படும் தாமதம் காரணமாக குறித்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முழுமையான இலத்திரனியல் கடவுச்சீட்டு முறைக்கு (fully online eVisa system) மாறும் போது அவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரித்தானியாவில் 2024 டிசம்பர் மாத இறுதிக்குள் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் பர்மிட் (BRP), விசா வின்யெட் ஸ்டிக்கர் மற்றும் பயோமெட்ரிக் ரெசிடென்ஸ் கார்டு (BRC) போன்ற ஆவணங்களை இலத்திரனியல் கடவுசீட்டாக மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 3.1 மில்லியனிற்கும் மேற்பட்டோர் இலத்திரனியல் கடவுசீட்டு மாற்றத்தை முடித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், இன்னும் பலர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இந்த நேரக்கெடுவை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதுடன் இதனை எளிதாக்க அரசு உறுதியுடன் செயல்படுவதாக குடியேற்ற மற்றும் குடியுரிமை விவகார அமைச்சர் சீமா மால்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

2024 டிசம்பர் 31 அன்று அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் ஆவணங்கள், 2025 மார்ச் 31 வரை சர்வதேச பயணங்களுக்கு செல்லுபடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலத்திரனியல் கடவுசீட்டு முறைமைக்கு மாறுவது இலவசமானது என்றும், இது பாதுகாப்பானதும் எளிமையானதுமான பயண அனுபவத்தை வழங்கும் என்றும், விசா கோரி தேவையற்ற ஆவணங்களை இழப்பது அல்லது மாற்றம் செய்யப்படும் அபாயம் இல்லாததையும் பிரித்தானிய அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் பிரித்தானியா குடியேற்ற முறையை முழுமையாக டிஜிட்டல் சேவைக்கு மாற்றுவதற்கான திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...