1 23
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் பூமிக்கடியில் உருவாக்கப்படும் பிரம்மாண்ட பள்ளங்கள்

Share

ஜேர்மனியில் பூமிக்கடியில் உருவாக்கப்படும் பிரம்மாண்ட பள்ளங்கள்

ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் கோடை காலத்தில் ஏற்படும் நீர் பற்றாகுறை பிரச்சினைக்கு தீர்வாக புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நீர் பற்றாகுறையை தீர்ப்பதற்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு, பூமிக்கடியில் நீரை சேமிப்பதற்காகவே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அவ்வாறு தோண்டப்படும் பள்ளங்களில் மழை நீரை சேகரித்து, அந்த நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி பயன்பாட்டுக்கு உகந்த நீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இதுவரை ஒன்பது சேமிப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கன மழை பெய்யும் பொழுது நிரம்பி வழியும் கழிவு நீர் பிரச்சினைக்கு இந்த பிரம்மாண்ட பள்ளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதன்போது, சேமிக்கப்படும் கழிவு நீரை சுத்திகரித்து, மழையின் பின் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆறுகளில் விடுவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான திட்டங்களினால் மழைநீர் வீணாவதைத் தடுப்பதுடன்அந்த நீரை சேகரித்து சுத்திகரித்து பயிர்களுக்கு பயன்படுத்த கூடியதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...