4be209b0 d4fb 11f0 949c 45d05c88eada
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்கு நிலம் இல்லை என்ற நிபந்தனையுடன் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயார்!

Share

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் முகமாக, மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்க உக்ரைன் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், ரஷ்யாவுக்குத் தமது நிலப்பகுதியை விட்டுக் கொடுக்காத வகையில் ஒப்பந்தம் அமைந்துள்ளது என்பதாகும்.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி, எந்த நிலத்தையும் ரஷ்யாவிற்கு விட்டுக் கொடுக்க முடியாது என்றும், அது உக்ரைன் அரசியல் சட்டத்திற்கும் சர்வதேச சட்டத்திற்கும் முரண்படும் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் நேட்டோ தலைவர்களைச் சந்தித்த பின்னர், அமெரிக்காவுக்குத் தமது புதிய திட்டத்தை விரைவில் அனுப்பலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின்படி, ரஷ்யாவுக்கு உக்ரைனின் நிலத்தை விட்டுக் கொடுக்கும் அம்சம் இடம்பெற்றிருந்தது.

அமெரிக்கா முன்வைத்த 28 அம்ச அமைதி முன்மொழிவு உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த முன்மொழிவு ரஷ்யாவுக்குச் சாதகமானது என்றும் அந்த நாடுகள் விமர்சனம் வெளியிட்டுள்ளன.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....