உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களை ஒரே வாரத்தில் இழந்த ரஷ்யா

tamilni 303 scaled
Share

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் 6,700 இராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை உக்ரைன் ஆயுதப்படையின் ஜெனரல் வெளியிட்ட தகவலில், ரஷ்யா கடந்த 7 நாட்களில் மட்டும் 6,700 இராணுவ வீரர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 930 இராணுவ வீரர்களை இழந்து இருப்பதாகவும், இந்த வாரத்தில் உள்ள 3 நாட்களில் ரஷ்யா 1000க்கும் அதிகமான வீரர்களை இழந்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனுடன் ரஷ்யா 88 டாங்கிகளையும், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,720 டாங்கிகளையும் ரஷ்யா இழந்து இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபரில் பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலில், 1,90, 000 வீரர்களை ரஷ்ய இராணுவம் இழந்து இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து டிசம்பர் 12ம் திகதி அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா 3,60,000 வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...