25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

Share

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிராந்தியத்தில் அவசர உதவிக்காக இராணுவ விமானங்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் நேற்று(13) ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நட்பு நாடுகளுக்கு இடையே இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து குறித்த கலந்துரையாடல் அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பிரித்தானியா நீண்ட கவலைகளை கொண்டுள்ளது எனவும் இஸ்ரேலின் தற்காப்புக்கான உரிமையை அங்கீகரிக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், போர் பதற்றம் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில் நாளை தொடங்கும் G7 உச்சிமாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில், நட்பு நாடுகளுடன் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் ஸ்டார்மர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...