25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

Share

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிராந்தியத்தில் அவசர உதவிக்காக இராணுவ விமானங்கள் அனுப்பப்படுவதாக பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் நேற்று(13) ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நட்பு நாடுகளுக்கு இடையே இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து குறித்த கலந்துரையாடல் அமைந்ததாக அவர் கூறியுள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து பிரித்தானியா நீண்ட கவலைகளை கொண்டுள்ளது எனவும் இஸ்ரேலின் தற்காப்புக்கான உரிமையை அங்கீகரிக்கிறது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், போர் பதற்றம் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில் நாளை தொடங்கும் G7 உச்சிமாநாட்டிற்கு செல்லவுள்ள நிலையில், நட்பு நாடுகளுடன் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் ஸ்டார்மர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...