16
உலகம்செய்திகள்

ஈரானின் அணுசக்தி திட்டம்: 71 புதிய தடைகளை அறிவித்த பிரித்தானியா

Share

பிரித்தானிய அரசு ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய 71 புதிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மாற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட அணுசக்தி தடைகளின் தொடர்ச்சியாக பிரித்தானியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மணி ஆகிய நாடுகள், 2015-ல் ஈரானுடன் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தடைகளை மீண்டும் கொண்டு வந்துள்ளன.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கம் இல்லை என மறுத்தாலும், பிரித்தானிய அரசு, “அணுசக்தி பரவலை கட்டுப்படுத்த” இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிய தடைகள் ஈரானின் முக்கிய அணுசக்தி அதிகரைகள், நிதி மற்றும் எரிசக்தி நிறுவனங்களை உள்ளடக்கியவை.

இவர்கள் மீது சொத்து முடக்கம், நிதி வரையறைகள் மற்றும் பயணத்தடைகள் விதிக்கப்படும்.

இந்த புதிய தடைகள், ஈரானின் அணுசக்தி திட்டத்தை சர்வதேச அளவில் கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், பிரித்தானியா தனது வெளிநாட்டு கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதையும் காட்டுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...