உலகம்செய்திகள்

பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு பிரித்தானியாவில் கட்டுப்பாடு விதிக்க திட்டம்

Share

பாராசிட்டமால் மாத்திரை விற்பனைக்கு பிரித்தானியாவில் கட்டுப்பாடு விதிக்க திட்டம்

பிரித்தானியாவில், மருந்தகங்களில் பிரித்தானியா மாத்திரை விற்பனையை கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றொரு பழமொழி உண்டு. எந்தப் பொருளுமே அளவுக்கு மீறினால் உடலுக்கு தீங்கைத்தான் ஏற்படுத்தும். சமீபத்திய ஆய்வுகள், அளவுக்கு மீறி தண்ணீர் அருந்துவது கூட சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றன.

பல நாடுகளில், தலை வலியோ, உடல் வலியோ வந்தால், உடனடியாக பார்மஸி என்னும் மருந்தகத்துக்குச் சென்று பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி உண்ணும் பழக்கம் உள்ளது.

மாதவிடாய் நாட்களில், வலியை சமாளிக்க தொடர்ச்சியாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் இளம்பெண்களும் இருக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் பாராசிட்டமால் மாத்திரையின் உறையில் பார்ப்பீர்களானால், அதில் ஒரு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அளவுக்கு மீறி பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த விடயம் நம்மில் பலருக்குத் தெரியாது. ஆனால், இதை அறிந்தவர்களோ, தங்கள் அறிவை தவறாக பயன்படுத்தும் சம்பவங்களும் இன்னொரு பக்கம் நடப்பதை மறுப்பதற்கில்லை.

ஆம், தற்கொலை செய்துகொள்ள விரும்பும் சிலர், பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்வதாக பிரித்தானிய தரப்பில் தகவல்கள் உள்ளன.

2018ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பிரித்தானியாவில் தற்கொலை செய்துகொள்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் மருந்து பாராசிட்டமால் என்பது தெரியவந்துள்ளது.

ஆகவே, மருந்தகங்களில் பாராசிட்டமால் மாத்திரைகள் விற்பனையை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது.

தற்போது, மக்கள் மருந்தகங்களுக்குச் சென்று 500 மில்லிகிராம் பாராசிட்டமால் மாத்திரைகளில் 16 மாத்திரைகளை ஒரே நேரத்தில் வாங்கமுடியும். இந்த எண்ணிக்கையைக் குறைக்கவும், அதன் மூலம் தற்கொலைகளைக் குறைக்கவும் அரசு திட்டமிட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...