24 6639ba033ba31
உலகம்செய்திகள்

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவைப்போல மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்ட பிரித்தானியா

Share

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவைப்போல மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்ட பிரித்தானியா

பிரித்தானியா, புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்த திட்டமிட்டுள்ளதைப்போல, மற்றொரு நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டதாக, லீக் ஆன ஆவணங்கள் சிலவற்றிலிருந்து தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோரையும், புகலிடக்கோரிக்கையாளர்களையும், ருவாண்டாவுக்கு அனுப்பி, அங்குவைத்து அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிப்பது ருவாண்டா திட்டத்தின் ஒரு பகுதியாகும். விடயம் என்னவென்றால், புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவோர் ருவாண்டாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்கு வரமுடியாது! பிரித்தானியாவில் வாழும் கனவில் வருவோர், ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாழும் நிலைதான் கடைசியில் ஏற்படும்.

இந்நிலையில், ருவாண்டாவைப் போலவே, மற்றொரு நாட்டுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டது குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

ஆம், புகலிடக்கோரிக்கையாளர்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்ட மற்றொரு நாடு ஈராக். உண்மையில், பிரித்தானியாவுக்கும் ஈராக்குக்கும் இடையில் புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்று ஏற்கனவே உள்ளது. விடயம் என்னவென்றால், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் எந்த நாட்டவரும் ருவாண்டாவுக்கு அனுப்பப்படலாம். ஆனால், ஈராக்குக்கோ, ஈராக் நாட்டவர்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்படுவதுதான் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...