மன்னர் சார்லசுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகை
உலகம்செய்திகள்

மன்னர் சார்லசுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகை

Share

மன்னர் சார்லசுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகை

பிரித்தானியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிவோர் ஊதிய உயர்வுக்காக சாலைகளில் இறங்கி போராடும் நிலை நிலவுகையில், மன்னர் சார்லசுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகை ஒன்று கொடுக்கப்பட இருப்பதாக ஆதாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன

மன்னர் சார்லசுக்கு 2025,26ஆம் ஆண்டுகளில் சுமார் 124.8 மில்லியன் பவுண்டுகள் முதல் 126 மில்லியன் பவுண்டுகள் வரை நிதி வழங்கப்பட உள்ளது.

இதைக் குறித்து, பிரித்தானிய பத்திரிகைகள் வெவ்வேறு விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜ குடும்ப ஆதரவு பத்திரிகைகள், மன்னர் சார்லசுக்கு அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என செய்திகள் வெளியிட, நடுநிலைமை வகிக்கும் பத்திரிகைகளோ, மன்னர் சார்லசுக்கு 2025,26ஆம் ஆண்டுகளில் சுமார் 45 சதவிகிதம் அதிக ஊதியம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன.

உண்மை என்னவென்றால், இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விடயங்களுமே உண்மைதான். அதாவது, அடுத்த ஆண்டில் மன்னருக்கு ஊதிய உயர்வு கிடையாது.

ஆனால், 2025இல் அவருக்கு வழங்கப்பட இருக்கும் தொகை, 38.5 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 124.8 மில்லியன் பவுண்டுகளாக ஆக உள்ளது. அதுவே, 2026இல் 126 மில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்க உள்ளது உண்மைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...