4 14 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்பு

Share

பிரித்தானியாவில் காணாமல் போன 63 வயது முதியவர்: கிப்பிங் ஆற்றில் சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் காணாமல் போன நபரின் சடலத்தை பொலிஸார் கிப்பிங் நதியில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை Ipswich பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஜூலியன் டி போனோ(Julian De Bono) என்ற முதியவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன அன்று ஜூலியன் இறுதியாக அதிகாலை 1.55 மணி அளவில் டாக்சியில் இருந்து இறங்கும் போது பார்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை தேடி வந்த பொலிஸார் மற்றும் நீருக்கடியில் தேடுதல் நடத்தும் குழு இன்று மதியம் 3 மணியளவில் கிப்பிங் ஆற்றில்(River Gipping) இருந்து அவரது உடலை வெளியே எடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து ஜீலியனின் குடும்பத்திற்கு இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள உடல் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு மரணத்திற்கான காரணம் நிறுவப்படும் என Suffolk பொலிஸாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இறந்தற்கான காரணத்தை தற்போது விவரிக்க முடியாது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜூலியன் காணாமல் போனதை தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலமும், நீரில் மூழ்குபவர்கள் உதவியுடனும் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி இருந்து குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...