2 7 1 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை: பிரித்தானியா புதிய திட்டம்

Share

புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை: பிரித்தானியா புதிய திட்டம்

பிரித்தானியாவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் மையங்கள் விரைவில் நிரம்பி வழியலாம் என்பதால், புலம்பெயர்ந்தோர் கால்களில் மின்னணுப்பட்டை அணிவிக்க பிரித்தானியா திட்டமிட்டு வருகிறது.

பிரித்தானியா, சட்டவிரோத புமபெயர்ந்தோரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது.

மிதவைப்படகுகளில் புலம்பெயர்ந்தோரை அடைக்கலாம் என்றால், அங்கு சுகாதாரப் பிரச்சினை. ருவாண்டாவுக்கு அனுப்ப திட்டமிட்டால், அந்த திட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் கூறிவிட்டது.

ஆனாலும், விடாமல் அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்துகொண்டே வருகிறது உள்துறை அலுவலகம்.

தடுப்புக்காவல் மையங்கள் நிரம்பும் பட்சத்தில், புகலிடக்கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க என்னென்ன வழிகள் உள்ளனவோ அத்தனையையும் முயன்றுபார்த்துவிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார் உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன்.

பிரித்தானியாவிலிருந்து ஒரு கூட்டத்தினரை வெளியேற்ற வேண்டியுள்ள நிலையில், அவர்களைக் கட்டாயம் கண்காணித்துத்தான் ஆகவேண்டும் என்று கூறியுள்ளார் சுவெல்லா.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை தடுப்புக்காவலில் வைக்க புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன. ஆனால், தடுப்புக்காவல் மையங்களில் 2,500 பேருக்குத்தான் இடம் உள்ளது.

ஆகவே, தடுப்புக்காவல் மையங்களில் இடமில்லாததால் வெளியே நடமாட விடப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தலைமறைவாகிவிடாமல் தடுப்பதற்காக, அவர்களுக்கு, காலில் மின்னணுப்பட்டை அணிவிப்பது முதல் பல்வேறு திட்டங்களை அதிகாரிகள் பரிசீலித்துவருவதாக தி டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...