133242527 gettyimages 2149720428
உலகம்செய்திகள்

பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர்

Share

பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர்

உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடுவதற்காக கடத்தல்காரர் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிலர், சமீபத்தில், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையமுயலும் புலம்பெயர்ந்தோரைக் காணச்சென்றிருக்கிறார்கள். அப்போது, அங்கு, பிரித்தானியாவிலிருந்து மீண்டும் பிரான்சுக்கே திரும்பிவிட்ட புலம்பெயர்ந்தோர் ஒருவரை அவர்கள் சந்தித்துள்ளார்கள்.

அவரது பெயர் ஓமர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கடத்தல்காரர்களுக்கு 12,000 பவுண்டுகள் படகு ஒன்றின் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார் குர்திஸ்தான் நாட்டவரான ஓமர். 20 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் ஒரு கடத்தல்காரருக்கு 500 பவுண்டுகள் கொடுத்து, எப்படியாவது தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடும்படி கையைக் காலைப் பிடித்து படகொன்றில் ஏறி மீண்டும் பிரான்சுக்கே வந்துவிட்டார் அவர்.

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இதைவிட பிரான்சே பரவாயில்லை என பிரான்சுக்கே திரும்பிவிட்டார் அவர்.

பிரான்சில் வாழ்க்கை கஷ்டம்தான். ஆனால், பிரித்தானியாவில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கைரேகையைப் பதிவு செய்யவேண்டும், கையெழுத்திடவேண்டும், இவ்வளவும் ஒழுங்காக செய்துவிட்டு, ஒருநாள் உங்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றார்கள் பிரித்தானிய அதிகாரிகள்.

அவர்கள் இனி என்னைக் கைது செய்து ருவாண்டாவுக்கோ அல்லது ஈராக்குக்கோ அனுப்பக்கூடும். என்னால் அங்கெல்லாம் போகமுடியாது, ஆகவே பிரான்சுக்கே வந்துவிட்டேன் என்கிறார் ஓமர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...