உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

22 5
Share

பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அலைபேசிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் இன்று அவசர எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டார்ராக் புயல் (Storm Darragh) பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான வானிலை சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்தே அந்நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று(06) மாலை 6.45 மணியளவில் அரசாங்கம் இந்த அவசர எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு அமைச்சரவை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சேதத்தை ஏற்படுத்தும் காற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய இடையூறுகள் பிரித்தானியர்களை அச்சுறுத்தலாம் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டிசம்பர் 7ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் காலை 11 மணி வரை பிரித்தானியா மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், புயலின் தீவிரம் நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளில் அலைபேசி சிக்னலை பாதிக்கலாம் என்று வானிலை அலுவலகம் எதிர்பார்க்கும் நிலையில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....