22 5
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Share

பிரித்தானியாவில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

பிரித்தானியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அலைபேசிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் இன்று அவசர எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டார்ராக் புயல் (Storm Darragh) பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான வானிலை சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்தே அந்நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று(06) மாலை 6.45 மணியளவில் அரசாங்கம் இந்த அவசர எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக அந்நாட்டு அமைச்சரவை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சேதத்தை ஏற்படுத்தும் காற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய இடையூறுகள் பிரித்தானியர்களை அச்சுறுத்தலாம் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டிசம்பர் 7ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் காலை 11 மணி வரை பிரித்தானியா மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், புயலின் தீவிரம் நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளில் அலைபேசி சிக்னலை பாதிக்கலாம் என்று வானிலை அலுவலகம் எதிர்பார்க்கும் நிலையில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...