tamilni 11 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…

Share

பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்…

பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது.

ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர்.

ஆனால், அவர்களை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால், வாக்காளர்கள் இந்த நாய்களை வாக்குச்சாவடிகளுக்கு வெளியே கட்டி வைத்தனர்.

பிரித்தானியாவில் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே நாய்கள் கட்டப்பட்டிருக்கும் படங்கள்…

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள டோர்செட் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே வாசலில் மலைப்பாம்பு ஒன்று தென்பட்டது. அதன் புகைப்படமும் வைரலானது.

வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வெவ்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வழங்கத் தொடங்கும்.

நாட்டில் உள்ள வாக்குச்சாவடிகளில் இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்குப் பிறகு ஜூலை 5-ஆம் திகதி அதிகாலையில் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்பது தெரியவரும்.

பிரித்தானியாவில் 14 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி இந்தத் தேர்தலில் தோல்வியடையும் எனத் தெரிகிறது.

தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...