america 1 2026 01 8231ad187862a15d431690887917d1fd 3x2 1
உலகம்செய்திகள்

வெனிசுலா மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்: ஜனாதிபதி மதுரோ சிறைபிடிப்பு – டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

Share

வெனிசுலா மீது திடீர் இராணுவத் தாக்குதலை நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைபிடித்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வெனிசுலாவின் பாரிய எண்ணெய் இருப்புகளை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவிற்குச் சாதகமான ஒரு நிலையான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் வெனிசுலாவில் தங்கியிருக்கும்.

அடுத்தகட்ட எச்சரிக்கை: அமெரிக்காவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டால், மீண்டும் ஒருமுறை இராணுவத் தாக்குதலை நடத்தத் தயங்கப்போவதில்லை என டிரம்ப் வொஷிங்டனில் நேற்று எச்சரித்துள்ளார். “மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமக்கு எதிராகச் செயல்பட்டால் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதும் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், கியூபாவின் கம்யூனிச ஆட்சி தானாகவே வீழும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் “வெனிசுலா தனது இயற்கை வளங்களைத் தற்காத்துக் கொள்ளும்.”

இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கண்ணியமான உறவை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் ஒரு இணக்கமான போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...