23 6538aedeebd7d scaled
உலகம்செய்திகள்

தடியடி திருவிழாவில் இருவர் மரணம்! 100 பேர் காயம்

Share

தடியடி திருவிழாவில் இருவர் மரணம்! 100 பேர் காயம்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது மல்லேஸ்வர சுவாமி கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

இதில் 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்வர். அவர்கள் இரு குழுக்களாக பிரிந்து கல்யாண உற்சவம் முடிந்த பின்னர், நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக் கொள்வார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது நடந்து வருகிறது.

அதன் பின்னர் வெற்றி பெறும் குழுவைச் சேர்ந்தவர்கள் உற்சவ மூர்த்தியை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில் நேற்று இரவு நடந்த தடியடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

அப்போது இரு குழுக்களாக பிரிந்து தடியால் தாக்கி அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த இருவர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தடியடி உற்சவத்தை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வந்தாலும், ஊர் மக்கள் அதை மீறி உற்சவத்தை நடத்தி வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...