8 43
உலகம்செய்திகள்

கனேடிய அரசாங்கத்தில் இரு முக்கிய வரிச்சலுகைகள் குறித்து அறிவிப்பு

Share

கனேடிய அரசாங்கத்தில் இரு முக்கிய வரிச்சலுகைகள் குறித்து அறிவிப்பு

எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி முதல் கனேடியர்களுக்கு ஜிஎஸ்டி (GST) உடனான வரிவிலக்குடன், வரிச் சலுகையை வழங்கவுள்ளதாக கனேடிய (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, உணவு பொருட்கள், சிற்றுண்டிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அனைத்தும் வரி இல்லாமல் கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வரிச் சலுகையானது, 2025ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சலுகையின் படி, அனைத்து உணவுப் பொருட்களையும் ஜிஎஸ்டி இலவசமாக்குவது கனேடியர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள சேமிப்பை வழங்கும் என அந்நாட்டு அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன், வசந்த கால தொடக்கத்தில், தொழில் புரிந்து வரும் கனேடியர்களுக்கு, அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு 150,000 டொலர் வருமானம் ஈட்டியவர்கள் 250 டொலர் பெறுமதியான காசோலையை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...