6 1 scaled
உலகம்செய்திகள்

ஈராக்கில் புகுந்து வான்வழித் தாக்குதல் நடத்திய துருக்கி: தாக்குதலுக்கு பதிலடி

Share

ஈராக்கில் புகுந்து வான்வழித் தாக்குதல் நடத்திய துருக்கி: தாக்குதலுக்கு பதிலடி

துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக வடக்கு ஈராக்கில் துருக்கி வான் தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துருக்கியின் தலைநகர் அங்காராவில் உள்ள நாடாளுமன்றத்தின் முன்பு ஞாயிற்றுக்கிழமை முற்பகுதியில் திடீரென பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 மாத இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு இரண்டு பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்தனர். அங்காராவில் நடந்த இந்த தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடத்தியவரில் ஒருவர் குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் பொலிஸாருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தலைநகர் அங்காரா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடக்கு ஈராக் மீது துருக்கி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இது தொடர்பாக X தளத்தில் துருக்கி அரசின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ஈராக்கில் உள்ள மெட்டினா, ஹகுர்க், காண்டில் மற்றும் காரா ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து மற்றும் பிரிவினைவாதிகளின் பகுதிகள் மீது இரவு 9 மணியளவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் பதுங்கு குழிகள், கிடங்குகள், குகைகள் ஆகிய மொத்தம் 20 இலக்குகள் குறிவைத்து அழிக்கப்பட்டது.

இந்த வான்வழித் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...