உலகம்செய்திகள்

இராணுவம் இறங்கும்… தேசிய அவசரநிலை: டொனால்டு ட்ரம்பின் அதிரவைக்கும் திட்டம்

17 12
Share

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் மொத்தம் 100 சிறப்பு நிர்வாக ஆணைகளை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் டொனால்டு ட்ரம்பின் உடனடி முன்னுரிமைகள் என்பது எல்லைப் பாதுகாப்பு மற்றும் அமெரிக்க எரிசக்தி உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புதல் என்றே கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், பொறுப்புக்கு வரும் முதல் நாளில் குறைந்தது 25 நிர்வாக ஆணைகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், புலம்பெயர் விவகாரம் தொடர்பில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, சட்டவிரோத புலம்பெயர் மக்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முதலில் தொடங்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் திட்டத்தில் அமெரிக்க இராணுவம் களமிறக்கப்படும், ஆனால் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 100,000 படுக்கைகளை ஒதுக்குவதற்காக தடுப்பு மையங்களுக்கு நிதியை அங்கீகரிக்க காங்கிரஸின் உதவியை நாட இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நாடுகளுக்கும் அந்த நாட்டு மக்களுக்கும் பயணத் தடை விதிக்கவும் ட்ரம்ப் தயாராகி வருகிறார். அமெரிக்காவில் பிறப்பதால் கட்டாயக் குடியுரிமை என்ற திட்டத்தையும் ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டுவர இருக்கிறார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....