4 54
உலகம்செய்திகள்

டிக்டொக் செயலி தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

Share

டிக்டொக் செயலி தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்காவின் (United States) புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அந்த நாட்டில் டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டொக் செயலி உதவியாக இருந்திருக்கலாம்.

அத்தோடு, மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் சார்பில் அமெரிக்க அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரல் ஜோன் சாயர் அமெரிக்க உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான தாம் பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...