4 54
உலகம்செய்திகள்

டிக்டொக் செயலி தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

Share

டிக்டொக் செயலி தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்காவின் (United States) புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அந்த நாட்டில் டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டொக் செயலி உதவியாக இருந்திருக்கலாம்.

அத்தோடு, மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் சார்பில் அமெரிக்க அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரல் ஜோன் சாயர் அமெரிக்க உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான தாம் பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...