1 30
உலகம்செய்திகள்

ட்ரம்பின் வர்த்தகப் போர்… பிரித்தானியாவுக்கு 24 பில்லியன் பவுண்டுகள் பொருளாதார இழப்பு

Share

ட்ரம்பின் வர்த்தகப் போர்… பிரித்தானியாவுக்கு 24 பில்லியன் பவுண்டுகள் பொருளாதார இழப்பு

மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கும் நாடுகள் மீது தனித்தனியாக வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சுமார் 24 பில்லியன் பவுண்டுகள் இழப்பை பிரித்தானியா எதிர்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு VAT எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கும் நாடுகளுக்கு தனித்தனியாக வரி வசூலிக்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பொதுவாக 21 சதவிகித வரி வசூலிக்கப்படும் என்றே தகவல் கசிந்துள்ளது. இது ஒவ்வொரு நாடுக்கும் தனித்தனியாக செயல்படுத்தப்பட இருப்பதால், பிரித்தானியாவுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாக தெரியவில்லை.

தற்போது பிரித்தானியா சராசரியாக 20 சதவிகிதம் மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலித்து வருகிறது. ஆனால் ட்ரம்ப் தெரிவிக்கையில், VAT என்பதை தாம் வரி விதிப்பாகவே கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் வரி விதிப்புகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தில் 0.4 சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்றும், அது 24 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

எந்த நாடும் புகார் தெரிவிக்காத வகையில், ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய வரியை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரிட்டிஷ் வர்த்தக சபையின் வர்த்தகக் கொள்கைத் தலைவர் William Bain தெரிவிக்கையில்,

இந்த ஆண்டு ஏற்கனவே கடினமான தொடக்கமாக மாறியிருப்பதால், ட்ரம்பின் இந்த முடிவு முதலீட்டாளர்கள், வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிக செலவு மற்றும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்றார்.

மட்டுமின்றி, ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் வாகனங்கள், மருந்து மற்றும் உணவு மற்றும் பானம் போன்ற துறைகள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.

மேலும், அமைச்சர்கள் மாற்று ஏற்பாடுகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...