3 21
உலகம்செய்திகள்

ட்ரம்ப் – புடின் சந்திப்பே இறுதி முடிவு.. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு

Share

துருக்கியில் உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அதிக எதிர்பார்ப்புகள் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் சந்திக்க வேண்டியது அவசியம் என்று அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரி மார்கோ ரூபியோ வலியுறுத்தியுள்ளார்.

“இந்த விடயத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ஜனாதிபதி புடின் நேரடியாக தொடர்பு கொள்ளும் வரை இங்கு ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை என்பது எனது மதிப்பீடு” என்று தெற்கு துருக்கியில் நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பிறகு அவர் கூறினார்.

முன்னதாக, இஸ்தான்புல்லில் உள்ள ரஷ்ய அதிகாரிகளைச் சந்திக்க உக்ரைன் ஒரு குழுவை அனுப்பும் என்று வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தினார்.

ஆனால் ரஷ்யா அவர்களை பெரிதாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். அங்காராவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கீழ் மட்ட” மாஸ்கோ தூதுக்குழுவை விமர்சித்தார்.

அதன் தலைவரும், ஜனாதிபதி உதவியாளருமான விளாடிமிர் மெடின்ஸ்கி, கிரெம்ளின் குழுவிடம் “தேவையான அனைத்து திறன்களும்” இருப்பதாக வலியுறுத்தினார்.

Share
தொடர்புடையது
23305205 elan 648
செய்திகள்உலகம்

உலகின் முதல் 600 பில்லியன் டொலர் அதிபதி: எலான் மஸ்க் புதிய வரலாற்று சாதனை!

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே...

1653799819 elephant pearls
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தளையில் கஜ முத்துக்களுடன் சந்தேக நபர் கைது: ஒரு மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

மாத்தளை நகரில் சட்டவிரோதமான முறையில் கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற ஒருவரை வனவிலங்கு பாதுகாப்புத்...

Namal Rajapksha SLPP Presidential Candidate
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான ‘கிரிஷ் ஒப்பந்த’ வழக்கு: பெப்ரவரி 16-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிரிஷ் (Krish) நிறுவன ஒப்பந்தம் தொடர்பான நிதி முறைகேடு குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு...

25 692cda477c3f7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு நாயாறு பாலம் மீட்பு: இராணுவ பொறியாளர்களின் துரித நடவடிக்கையால் மீண்டும் போக்குவரத்து சீர்!

‘டிட்வா’ (Ditwah) புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் முற்றாகச் சேதமடைந்திருந்த முல்லைத்தீவு – நாயாறு...