உலகம்செய்திகள்

பதவியேற்புக்கு மறுநாள்: புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் துவங்கவிருக்கும் பாரிய நடவடிக்கை

11 32
Share

பதவியேற்புக்கு மறுநாள்: புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் துவங்கவிருக்கும் பாரிய நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.

சரியாக அதற்கு மறுநாள், அதாவது செவ்வாய்க்கிழமை, புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான சிகாகோ நகரில், புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து பாரிய ரெய்டு ஒன்றை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக Wall Street Journal ஊடகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று துவங்கும் அந்த ரெய்டு, அந்த வாரம் முழுவதும் நீடிக்க இருப்பதாகவும், அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அந்த ரெய்டுக்காக 100 முதல் 200 அதிகாரிகளை அனுப்ப இருப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

உண்மையில், சிகாகோ மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதுமே ரெய்டுகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர்.

நியூயார்க்கிலும், மியாமியிலும், ஏன் அமெரிக்கா முழுவதுமே ஆபரேஷன்களையும், கைது நடவடிக்கைகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று கூறுகிறார் அவர்.

ஆக, செவ்வாயன்று சிகாகோவில் நடைபெற இருக்கும் ரெய்டு, நாடு முழுவதும் புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளின் துவக்கமே என்கிறார் புலம்பெயர்தல் துறை அதிகாரியான Tom Homan என்பவர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...