11 32
உலகம்செய்திகள்

பதவியேற்புக்கு மறுநாள்: புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் துவங்கவிருக்கும் பாரிய நடவடிக்கை

Share

பதவியேற்புக்கு மறுநாள்: புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் துவங்கவிருக்கும் பாரிய நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.

சரியாக அதற்கு மறுநாள், அதாவது செவ்வாய்க்கிழமை, புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ட்ரம்ப் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான சிகாகோ நகரில், புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து பாரிய ரெய்டு ஒன்றை நடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக Wall Street Journal ஊடகம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று துவங்கும் அந்த ரெய்டு, அந்த வாரம் முழுவதும் நீடிக்க இருப்பதாகவும், அமெரிக்க புலம்பெயர்தல் மற்றும் சுங்க அமலாக்கத்துறை அந்த ரெய்டுக்காக 100 முதல் 200 அதிகாரிகளை அனுப்ப இருப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

உண்மையில், சிகாகோ மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதுமே ரெய்டுகள் நடக்க இருப்பதாக தெரிவிக்கிறார் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர்.

நியூயார்க்கிலும், மியாமியிலும், ஏன் அமெரிக்கா முழுவதுமே ஆபரேஷன்களையும், கைது நடவடிக்கைகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்று கூறுகிறார் அவர்.

ஆக, செவ்வாயன்று சிகாகோவில் நடைபெற இருக்கும் ரெய்டு, நாடு முழுவதும் புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கைகளின் துவக்கமே என்கிறார் புலம்பெயர்தல் துறை அதிகாரியான Tom Homan என்பவர்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...