17 28
உலகம்செய்திகள்

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எல்லைக்கு ராணுவத்தை அனுப்பும் ட்ரம்ப்

Share

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எல்லைக்கு ராணுவத்தை அனுப்பும் ட்ரம்ப்

அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவதற்காக, நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை எல்லைக்கு அனுப்ப உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை எல்லைக்கு அனுப்ப உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

ஏற்கனவே அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சுமார் 1,500 ராணுவ வீரர்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள இருக்கிறார்கள்.

தேசிய அவசர நிலை பிறப்பிக்கும் ட்ரம்பின் ஆணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பெருமளவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், அதைச் செய்துமுடிக்க, பல ஆண்டுகள் ஆகலாம் என்பதுடன், அரசுக்கு பெரும் செலவும் பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...