17 28
உலகம்செய்திகள்

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எல்லைக்கு ராணுவத்தை அனுப்பும் ட்ரம்ப்

Share

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எல்லைக்கு ராணுவத்தை அனுப்பும் ட்ரம்ப்

அமெரிக்காவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவதற்காக, நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை எல்லைக்கு அனுப்ப உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான ராணுவத்தினரை எல்லைக்கு அனுப்ப உள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

ஏற்கனவே அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சுமார் 1,500 ராணுவ வீரர்கள் அவர்களுடன் இணைந்துகொள்ள இருக்கிறார்கள்.

தேசிய அவசர நிலை பிறப்பிக்கும் ட்ரம்பின் ஆணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பெருமளவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், அதைச் செய்துமுடிக்க, பல ஆண்டுகள் ஆகலாம் என்பதுடன், அரசுக்கு பெரும் செலவும் பிடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...