உலகம்செய்திகள்

தொடரும் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள்: மற்றுமொரு நாட்டிற்கு நிதியை நிறுத்த திட்டம்

5 4
Share

பதவியேற்றதிலிருந்து அதிரடியான நடவடிக்கைளில் ஈடுபட்டுவரும் டொனால்ட் ட்ரம்ப் தற்போது தென் ஆபிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக தெரிவித்தே டொனால்ட் ட்ரம்ப் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடியான நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல நாடுகளுக்கு வரி விதிப்பையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இதற்கு கனடா(Canada) மற்றும் சீனா(China) ஆகிய நாடுகள் தங்களது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அத்துடன் பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையிலேயே தற்போது தென் ஆபிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பான அவரது அறிவிப்பில்,

“தென் ஆபிரிக்க நாட்டில் புதிய நில அபகரிப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது.

இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி விதிப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் ட்ரம்ப் எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...