images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

Share

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், குறித்த விளம்பரத்தை ‘மோசடி’ (fraud) என அழைத்தார்.

மேலும், உலகத் தொடர் பேஸ்பால் சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக அந்த விளம்பரத்தை அகற்றாததற்காக கனேடிய அதிகாரிகளை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

வரி உயர்வு: “உண்மைகளை கனடா தவறாகச் சித்தரித்ததாலும், விரோதமான செயல்களாலும், கனடா மீதான வரியை, இப்போது செலுத்தும் தொகையை விட 10 வீதமாக உயர்த்துவதாக” டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையை முன்வைத்து, முன்னதாக, கடந்த வியாழக்கிழமை கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து டிரம்ப் விலகினார்.

இதனையடுத்து ஒன்ராறியோ பிரதமரும் குறித்த விளம்பரத்தை நீக்குவதாகக் கூறியிருந்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததாலேயே டிரம்ப் தற்போது வரிகளை அதிகரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1732463885 students in flood 6
செய்திகள்இலங்கை

சீரற்ற காலநிலை பாதிப்பு: 18 மாவட்டங்கள் பாதிப்பு; மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக, 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது....

MediaFile 7
இலங்கைசெய்திகள்

புழல் சிறையில் உள்ள இலங்கையருக்கு அடிப்படை மருத்துவ உதவி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை விசாரணைக் கைதிகளுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க...

image 5b342b3cea
செய்திகள்இலங்கை

வங்கக்கடல் வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாகப்பட்டினம் – இலங்கை (காங்கேசன்துறை) இடையேயான பயணிகள் கப்பல்...

srilankan airline 300x157 1
செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி பிரஜை கைது

சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்...