images 1 7
உலகம்செய்திகள்

ரீகன் விளம்பரம் நீக்கப்படாததால் கோபம்: கனடாப் பொருட்களுக்கான வரிகளை 10% உயர்த்த டிரம்ப் அறிவிப்பு!

Share

முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைக் கொண்ட வரி எதிர்ப்பு விளம்பரத்தை ஒன்ராறியோ மாகாணம் ஒளிபரப்பியதையடுத்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை மீண்டும் ஒருமுறை அதிகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், குறித்த விளம்பரத்தை ‘மோசடி’ (fraud) என அழைத்தார்.

மேலும், உலகத் தொடர் பேஸ்பால் சாம்பியன்ஷிப்பிற்கு முன்னதாக அந்த விளம்பரத்தை அகற்றாததற்காக கனேடிய அதிகாரிகளை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

வரி உயர்வு: “உண்மைகளை கனடா தவறாகச் சித்தரித்ததாலும், விரோதமான செயல்களாலும், கனடா மீதான வரியை, இப்போது செலுத்தும் தொகையை விட 10 வீதமாக உயர்த்துவதாக” டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினையை முன்வைத்து, முன்னதாக, கடந்த வியாழக்கிழமை கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளிலிருந்து டிரம்ப் விலகினார்.

இதனையடுத்து ஒன்ராறியோ பிரதமரும் குறித்த விளம்பரத்தை நீக்குவதாகக் கூறியிருந்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததாலேயே டிரம்ப் தற்போது வரிகளை அதிகரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Weligama Incident 1200x675px 23 10 25
இலங்கைசெய்திகள்

வெலிகம தலைவர் கொலை: சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் வெளியீடு; தென் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று...

images 8
செய்திகள்இந்தியா

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் Meta உடன் இணைந்து AI துறையில் நுழைவு: ‘Reliance Intelligence’ தொடங்கப்படுகிறது!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால்...

Sea 1200px 22 05 24 1000x600 1
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் ஆழமான தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு சுமார் 50 முதல்...

z p00 Namal Rajapaksa
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கொலைகள் அதிகரிப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை: சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை இழக்கிறது!

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைக் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...